» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:39:50 AM (IST)

தட்டார்மடம் அருகே வீட்டின் மாடியில் இருந்து வாலிபர்  தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள கடக்குளத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சூர்யா (27). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராஜநித்யா (24). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சூர்யா கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை மனைவி கண்டித்துள்ளார்.

இந்நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் மாடி வீடு கட்டும் பணியிடத்துக்கு சூர்யா சென்றாராம். அப்போது மது அருந்திய போதையில் 2-வது மாடிக்கு சென்ற அவர் அங்கிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory