» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:39:50 AM (IST)
தட்டார்மடம் அருகே வீட்டின் மாடியில் இருந்து வாலிபர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள கடக்குளத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சூர்யா (27). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராஜநித்யா (24). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சூர்யா கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை மனைவி கண்டித்துள்ளார்.
இந்நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் மாடி வீடு கட்டும் பணியிடத்துக்கு சூர்யா சென்றாராம். அப்போது மது அருந்திய போதையில் 2-வது மாடிக்கு சென்ற அவர் அங்கிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










