» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற காவலருக்கு இறுதி அஞ்சலி

வியாழன் 23, மார்ச் 2023 3:02:14 PM (IST)



தூத்துக்குடியில் காலமான ஓய்வுபெற்ற காவலருக்கு காவல்துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்..

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த  அங்குசாமி (85) உடல் நலக்குறைவால் காலமானார். காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் அறிவுறுத்தலின்படி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் இன்று அன்னாரது இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் சைலேந்திரபாபு சார்பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory