» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற காவலருக்கு இறுதி அஞ்சலி
வியாழன் 23, மார்ச் 2023 3:02:14 PM (IST)
தூத்துக்குடியில் காலமான ஓய்வுபெற்ற காவலருக்கு காவல்துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்..
தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த அங்குசாமி (85) உடல் நலக்குறைவால் காலமானார். காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் அறிவுறுத்தலின்படி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் இன்று அன்னாரது இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் சைலேந்திரபாபு சார்பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.