» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வரதவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

வியாழன் 23, மார்ச் 2023 2:49:56 PM (IST)



தூத்துக்குடி புதுக்கிராமம் அருள்மிகு ஸ்ரீ வரதவிநாயகர் கோவிலில் கும்பாவிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

தூத்துக்குடி புதுக்கிராமம் அருள்மிகு ஸ்ரீவரத விநாயகர், ஸ்ரீபால சுப்பிரமணியர். ஸ்ரீமணிகண்ட ஐயப்பன் திருக்கோவில் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக கடந்த 21ம் தேதி யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 4 கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. 

கும்பாபிேஷக தினமான இன்று காலை ஸ்ரீவிநாயக பூஜை, குருபூஜை, உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 9.24 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாரதனை, அலங்காரம் நடைபெற்றது. கும்பாபிஷேக பூஜைகளை சிவன்கோவில் பிரதான பட்டர் செல்வம், சிவகாசி பச்சமலை கந்தவிநாயகர் கோவில் மணிகண்ட சிவாச்சாரியார், ஸ்ரீவரத விநாயகர் முத்து ஹரிஹரன் ஹரிஸ்பட்டர் ஆகியோர் நடத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory