» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி காவல்துறைக்கு புதிய ரோந்து வாகனங்கள் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வியாழன் 23, மார்ச் 2023 12:05:22 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை எஸ்பி பாலாஜி சரவணன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு வழங்கிய ரூ.7,04,208 மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன்படி ஆறுமுகநேரி, மத்தியபாக போக்குவரத்து பிரிவு, தென்பாக போக்குவரத்து பிரிவு, தாளமுத்துநகர், முத்தையாபுரம், சிப்காட், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் மற்றும் குலசேகரபட்டினம் ஆகிய காவல் நிலைய ரோந்துப் பணிக்கு வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன், உதவி ஆய்வாளர் மணிகண்டன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர்கள்நாகராஜ், வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.