» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காவல்துறைக்கு புதிய ரோந்து வாகனங்கள் : எஸ்பி துவக்கி வைத்தார்!

வியாழன் 23, மார்ச் 2023 12:05:22 PM (IST)



தூத்துக்குடி  மாவட்ட காவல்துறைக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை எஸ்பி பாலாஜி சரவணன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு வழங்கிய ரூ.7,04,208 மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.  அதன்படி ஆறுமுகநேரி, மத்தியபாக போக்குவரத்து பிரிவு, தென்பாக போக்குவரத்து பிரிவு, தாளமுத்துநகர், முத்தையாபுரம், சிப்காட், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் மற்றும் குலசேகரபட்டினம் ஆகிய காவல் நிலைய ரோந்துப் பணிக்கு வழங்கினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆயுதப்படை  காவல் ஆய்வாளர் சுனைமுருகன், உதவி ஆய்வாளர் மணிகண்டன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர்கள்நாகராஜ், வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory