» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பா.ஜனதா பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

வியாழன் 23, மார்ச் 2023 11:38:52 AM (IST)

கோவில்பட்டியில் பா.ஜனதா பொதுச்செயலாளர் வீட்டில் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சிவந்தி நாராயணன். இவர் பா.ஜனதா பட்டியலின மாநில பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் இருந்து கார் மூலம் வந்த அமலாக்கத்துறை  அதிகாரிகள் கோவில்பட்டியில் உள்ள சிவந்தி நாராயணன் வீட்டில் இன்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி அவரது வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  இதனிடையே சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வீடு முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory