» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பா.ஜனதா பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
வியாழன் 23, மார்ச் 2023 11:38:52 AM (IST)
கோவில்பட்டியில் பா.ஜனதா பொதுச்செயலாளர் வீட்டில் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சிவந்தி நாராயணன். இவர் பா.ஜனதா பட்டியலின மாநில பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் இருந்து கார் மூலம் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கோவில்பட்டியில் உள்ள சிவந்தி நாராயணன் வீட்டில் இன்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி அவரது வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனிடையே சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வீடு முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.