» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் - தூத்துக்குடிக்கு தனியார் பேருந்து திடீர் நிறுத்தம் - மக்கள் அவதி!!

வியாழன் 23, மார்ச் 2023 11:12:08 AM (IST)

நாசரேத் - தூத்துக்குடிக்கு  புதுக்கோட்டை வழியாக தனியார் பேருந்து ஒரு மாத காலமாக இயக்கப்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாசரேத் பேருந்து நிலையத்தில் இ ருந்து காலை 9.40 மணிக்கு நாசரேத் - தூத்துக்குடிக்கு  புதுக்கோட்டை வழியாக செல்லும் தனியார் பேருந்து  பல மாதங்களாக இந்த வழி தடத்தில்  இயக் கப்படாமல் உள்ளது.இத னால் கடைகள், அலுவல கங்கள், மற்றும் மூக்குப்பீறி அரசு மருத்துவமனை, நாலு மாவடி மிஷன் மருத்துவம னைக்குசெல்லும் நோயாளி கள் பொதுமக்கள் பலரும் பெரும் இன்னலுக்கு உள் ளாகின்றனர்.

ஏன் இந்த பாதிப்பு என்றால் 9: 25 க்கு நாசரேத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசு பேருந்துக்கு பின்னர் தூத் துக்குடிக்கு நாசரேத்தில் இருந்து 1 மணி நேரத்துக்கு மேல்பேருந்துவசதிஇல்லை. 9.25க்கு பின் உவரி - தூத் துக்குடி செல்லும் அரசு பேருந்து 10.30 மணிக்கு பின்னரே நாசரேத் பேருந்து நிலையம் வந்தடையும்.  காலை 9.30 -9.40 மணிக்குள் நாசரேத் பேருந்து நிலையத் துக்குள் சாத்தான்குளம்- திருநெல்வேலி தனியார் பேருந்து திருநெல்வேலி -சாத்தான்குளம், அரசு பேருந்து உடன்குடி  போன்ற பேருந்துகளில் வந்து  ஏரல், தூத்துக்குடி செல்ல காத்தி ருக்கும் பயணிகள் பேருந்து நிலையத்திலயே காத்திருக் கும் அவல நிலை ஏற்படுகி றது.

எனவே அரசு வழி தடத் தில் இயங்கும் தனியார் பேருந்து சரிவர இயங்க நட வடிக்கை எடுக்கவேண்டும்.  இல்லையேல் பயணிகளின் நலன் கருதி 9.25 செல்லும் அரசுபேருந்தினை 9.40 க்கு செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும்.இவ்வாறு பொது மக்கள் விரும்புகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory