» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீன்பிடி வலையில் சிக்கிய 8 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

வியாழன் 23, மார்ச் 2023 11:02:37 AM (IST)



நாசரேத் கடையனோடை வாய்க்காலில் மீன்பிடி வலையில் 8 அடி நீளம் கொண்ட அரிய வகை மலைப்பாம்பு சிக்கியது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகில் உள்ள கடையனோடை பகுதியில் மீன் பிடிப்பதற்காக அங்குள்ள வாய்க்கால் பகுதியில் ஒருவர் வலையை விரித்துவிட்டு சென்றுள்ளார்..சிறிது நேரத்திற்கு பிறகு அவ்வழியாக வந்தவர்கள் மீன்பிடி வளையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கனிமொழி அரசு தலைமையில் வனவர்கள் கருணாகரன், சுரேஷ் வனக்காப்பாளர் சக்திவேல்,வன காவலர் அபிஷேக் ஆகியோர் 8 அடி நீளம் கொண்ட  அரிய வகை மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு ராஜபதி வன காப்பு பகுதியில் விட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory