» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
வியாழன் 23, மார்ச் 2023 10:46:15 AM (IST)
கோவில்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள முனியசாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை பூசாரி கோவிலை திறக்க வந்தபோது கோவிலில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது.
மேலும், கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மனைவி லட்சுமி (30) என்பவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.