» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடுபுகுந்து பொருட்களை சூறையாடியவர் கைது - மனைவி உட்பட 3பேர் மீது வழக்கு!

வியாழன் 23, மார்ச் 2023 10:26:37 AM (IST)

தூத்துக்குடியில் பணத் தகராறில் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியவரை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவி உட்பட 3 பெண்களை தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி  திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்தவர் கண்ணையா மகன் மாரிமுத்து (53). இவர் அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மனைவி பஞ்சவர்ணம் (60) என்பவருக்கு சொந்தமான வீட்டை ரூ.35 லட்சத்திற்கு பேசி, ரூ.20 லட்சம் கொடுத்தாராம். ஆனால் பத்திரம் முடிக்கவில்லையாம். இந்நிலையில் மீதி 15 லட்சம்  பணத்தை பஞ்சவர்ணம் கேட்டாராம். அதற்கு மாரிமுத்து வீட்டை காலி செய்து கொடுத்தால் தான் மீதி பணம் தருவேன் என்று கூறினாராம். 

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து, அவரது மனைவி காளியம்மாள் (46)  மற்றும் சிலர் சேர்ந்து பஞ்சவர்ணத்தின் வீட்டிற்குள் சென்று அங்கிருந்த டிவி  உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டாராம். இது தொடர்பாக பஞ்சவர்ணம் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில்,   சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தார். மேலும் அவரது மனைவி உட்பட  3பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory