» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீடுபுகுந்து பொருட்களை சூறையாடியவர் கைது - மனைவி உட்பட 3பேர் மீது வழக்கு!
வியாழன் 23, மார்ச் 2023 10:26:37 AM (IST)
தூத்துக்குடியில் பணத் தகராறில் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியவரை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவி உட்பட 3 பெண்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்தவர் கண்ணையா மகன் மாரிமுத்து (53). இவர் அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மனைவி பஞ்சவர்ணம் (60) என்பவருக்கு சொந்தமான வீட்டை ரூ.35 லட்சத்திற்கு பேசி, ரூ.20 லட்சம் கொடுத்தாராம். ஆனால் பத்திரம் முடிக்கவில்லையாம். இந்நிலையில் மீதி 15 லட்சம் பணத்தை பஞ்சவர்ணம் கேட்டாராம். அதற்கு மாரிமுத்து வீட்டை காலி செய்து கொடுத்தால் தான் மீதி பணம் தருவேன் என்று கூறினாராம்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து, அவரது மனைவி காளியம்மாள் (46) மற்றும் சிலர் சேர்ந்து பஞ்சவர்ணத்தின் வீட்டிற்குள் சென்று அங்கிருந்த டிவி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டாராம். இது தொடர்பாக பஞ்சவர்ணம் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தார். மேலும் அவரது மனைவி உட்பட 3பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










