» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனன்மின் நிலையத்தில் ஊழியர் திடீர் மரணம் - போலீஸ் விசாரணை!

வியாழன் 23, மார்ச் 2023 10:17:13 AM (IST)

தூத்துக்குடி என்டிபிஎல் அனன்மின் நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர் திடீரென மூச்சுத்தினறல் ஏற்பட்டு உயிரிழந்தார். 

தூத்துக்குடி கோரம்பள்ளம் மாதவன் நகரைச் சேர்ந்தவர் தாமஸ் மகன் சுதாகர் (29), இவர் தூத்துக்குடி என்டிபிஎல் அனன்மின் நிலையத்தில் எலக்ட்ரானிக் காண்ட்ராக்ட் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பணியில் இருந்தபோது திடீரென மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory