» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிராக்டர் மீது மோட்டார் பைக் மோதி விபத்து: முதியவர் பரிதாப சாவு
வியாழன் 23, மார்ச் 2023 10:08:43 AM (IST)
ஓட்டப்பிடாரம் அருகே நின்றுகொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் பைக் மோதிய விபத்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கக்கரம்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி (60). கூலி தொழிலாளி. இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு குறுக்குசாலையில் இருந்து கக்கரம்பட்டி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். கக்கரம்பட்டி விலக்கு அருகே சென்றபோது அங்கு டீசல் இல்லாமல் நின்ற டிராக்டரின் பின்புறமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் வேலுச்சாமி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வேலுச்சாமி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரான மேல லட்சுமிபுரம் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் மாரியப்பன் (43) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வாகைவிளையைச் சேர்ந்தவர் மாயாண்டி (75). இவா் கடந்த 20-ந் தேதி உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்டவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சித்திரைவேல் (37) அளித்தபுகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










