» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜே.சி.ஐ. பெம் ஸ்டார்ஸ் சார்பில் பெண் ஆட்டோ டிரைவர்கள் கௌரவிப்பு!!
வியாழன் 23, மார்ச் 2023 8:10:46 AM (IST)
தூத்துக்குடியில் ஜே.சி.ஐ. பெம் ஸ்டார்ஸ் சார்பில் பெண் ஆட்டோ டிரைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் ஜே.சி.ஐ. பெம் ஸ்டார்ஸ் சார்பாக பெண் ஆட்டோ டிரைவர்களான ரூபா தேவி, மற்றும் மாரிச்செல்வி ஆகியோருக்கு தலா 1000 ரூபாய் ரொக்கத் தொகை மற்றும் பரிசுகளை வழங்கி மண்டல துணை தலைவர் சதீஸ் குமார் கௌரவித்தார். தலைவர் குண சுந்தரி, பட்டய தலைவர் வகிதா பவாஸ், செயலாளர் ஓமனா பாலகணேஷ், துணை தலைவர் ஐஸ்வர்யா மஞ்சுநாத், அனித்தா ரியா, ஜி.சாந்தி, பத்மா, நிஷா குருசேகர் கிருஷ்ணவேணி, சாந்தி அருணாச்சலம், ரேபேக்கா பேகம், மரியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.