» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

புதன் 22, மார்ச் 2023 9:13:05 PM (IST)



தூத்துக்குடியில் போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் விபத்தின்றி உயிர் தப்பினர்.

தூத்துக்குடியிலிருந்து இன்றிரவு 7.40 மணியளவில் மதுரைக்கு புறப்பட்ட அரசுப் பேருந்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் பேருந்து தாறுமாறாக ஓடியதை கண்ட பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகளின் எதிர்ப்பால் நடத்துனர், டிரைவரிடம் சென்று பேசியுள்ளார்.

அப்போது டிரைவர் மிதமிஞ்சிய குடிபோதையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே பேருந்து நிறுத்தப்பட்டு உடனடியாக பணிமனை மேலாளர் மாடசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், பயணிகள் அனைவரும் வேறு பேருந்தில் பத்திரமாக ஏற்றி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

திராவிடம்Mar 23, 2023 - 02:47:55 PM | Posted IP 162.1*****

பூச்சி மருந்து கடையும் தான் வெச்சிருக்கு... போய் குடிச்சுட்டு சாவ வேண்டித்தான...

தமிழன்Mar 23, 2023 - 09:00:51 AM | Posted IP 162.1*****

வாழ்க டாஸ்மாக் , வாழ்க திராவிடம்.

KumarMar 22, 2023 - 09:39:53 PM | Posted IP 162.1*****

டாஸ்மாக் வாழ்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory