» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழிப்பறியில் ஈடுபட்ட 3பேர் குண்டாசில் கைது!!

புதன் 22, மார்ச் 2023 5:19:01 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 3பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 20.02.2023 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லூர் சாலை பகுதியில் நின்றுகொண்டிருந்த ஆறுமுகநேரி பேயன்விளை பகுதியை சேர்ந்த வல்லாள மகாராஜன் மகன் சுடலைமுத்து (34) என்பவரை அரிவாளால் தாக்கி அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற வழக்கில் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் பகுதியை சேர்ந்த முத்துசெல்வம் மகன் சாரதி (21), மணப்பாடு மீனவர் காலனியை சேர்ந்த பிரவீன்குமார் மகன் மரிய யோஸ்வின் (21) மற்றும் காயல்பட்டினம் அருணாசலபுரத்தை சேர்ந்த மகராஜன் மகன் திருமூர்த்தி (26) ஆகியோரை ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 3பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் உத்தரவின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory