» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வழிப்பறியில் ஈடுபட்ட 3பேர் குண்டாசில் கைது!!
புதன் 22, மார்ச் 2023 5:19:01 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 3பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 20.02.2023 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லூர் சாலை பகுதியில் நின்றுகொண்டிருந்த ஆறுமுகநேரி பேயன்விளை பகுதியை சேர்ந்த வல்லாள மகாராஜன் மகன் சுடலைமுத்து (34) என்பவரை அரிவாளால் தாக்கி அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற வழக்கில் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் பகுதியை சேர்ந்த முத்துசெல்வம் மகன் சாரதி (21), மணப்பாடு மீனவர் காலனியை சேர்ந்த பிரவீன்குமார் மகன் மரிய யோஸ்வின் (21) மற்றும் காயல்பட்டினம் அருணாசலபுரத்தை சேர்ந்த மகராஜன் மகன் திருமூர்த்தி (26) ஆகியோரை ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 3பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் உத்தரவின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.