» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா வழக்கில் 2பேர் கைது : 2 வாகனங்கள் பறிமுதல்
செவ்வாய் 21, மார்ச் 2023 2:54:51 PM (IST)
தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது..
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஜூடி மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர்கள் தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகரை சேர்ந்தவர்களான தமிழரசன் மகன் ஜெயேந்திரன் (24) மற்றும் முத்துப்பாண்டி மகன் ரமேஷ் கண்ணன் (20) ஆகியோர் என்பதும் அவர்கள் அப்பகுதியில் விற்பனைக்காக இரு சக்கர வாகனங்களில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஜெயேந்திரன் மீது ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 4 வழக்குகளும், ரமேஷ் கண்ணன் மீது கொலை வழக்கு உட்பட 5 வழக்குகளும் உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










