» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை : திமுக மகளிர் அணி கொண்டாட்டம்!

செவ்வாய் 21, மார்ச் 2023 11:52:01 AM (IST)



தமிழக பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்று திமுக மகளிர் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தார். இதையடுத்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் பழைய பஸ் நிலையம் முன்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் முன்னாள் மாநகராட்சி மேயர் கஸ்தூரி தங்கம் தலைமையில் பட்டாசுகள் வெடித்து பஸ் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ப்ளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, திலகராஜ், நிர்மல் ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் நாகேஸ்வரி,  ஜெயசீலி, வட்டச் செயலாளர் கதிரேசன், மகளிர் அணி நிர்வாகிகள் ஜெய்கனி, கலாவதி, சத்தியா, ரேவதி, நாராயண வடிவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory