» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வீட்டின் ஜன்னலை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 21, மார்ச் 2023 11:31:03 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி டூவிபுரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (65), இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜயா. இவர்கள் கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை்ககு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை, பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் ஜன்னல் கதவுகள் உடைந்து கிடந்தது.
இதுகுறித்து அவர் சென்னையில் உள்ள கருப்பசாமிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஐயப்பன், சப் இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 7 பவுன் நகை, ரூ.1லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











Pethuselvi.T AnandMar 23, 2023 - 11:15:27 AM | Posted IP 162.1*****