» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பேருந்தில் பெண்ணிடம் ரூ.87ஆயிரம் பணம் அபேஸ்

செவ்வாய் 21, மார்ச் 2023 11:17:21 AM (IST)

தூத்துக்குடியில் பெண்ணிடம் ரூ.87ஆயிரம் பணத்தை கைப்பையுடன் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு வெள்ளாரத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மனைவி சித்ரா (55). இவர் புதியமுத்தூரில் உள்ள வங்கியில் அவரது கணக்கில் இருந்து ரூ.85 ஆயிரம் எடுத்துக் கொண்டு தூத்துக்குடியில் உள்ள அவரது மகனை பார்க்க சென்றுள்ளார். பணத்தை கையில் இருந்த பையில் வைத்திருந்தார். 

பின்னர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்வதற்காக பஸ்சில் ஏறி அமர்ந்த போது தனது பையில் இருந்த ரூ.87 ஆயிரம் பணம் காணாமல் போய் இருந்தது. இதனால் பதறிப்போன சித்ரா இது குறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் இசக்கியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

ஹென்றி மரிய ஜேம்ஸ்Mar 22, 2023 - 03:36:34 PM | Posted IP 162.1*****

3வது மைல் முதல் மார்க்கெட் சிக்னல் வரை சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. உடனே சீரமைப்பு பணிகள் துவக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory