» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டாஸ்மாக் பாரில் ஊழியர் தற்கொலை!
செவ்வாய் 21, மார்ச் 2023 11:14:45 AM (IST)
தூத்துக்குடி டாஸ்மாக் பாரில் ஊழியர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் முருகன் (58). இவர் டி.சவேரியார்புரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்லாமல் அவர் அங்கேயே தங்கி விடுவாராம்.
இந்நிலையில் நேற்று இரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.