» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
செவ்வாய் 21, மார்ச் 2023 7:41:20 AM (IST)
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி முனியசாமிபுரம் லோகியாநகர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பா மகன் மீனாட்சி சுந்தரம் (34). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கந்தையா மகன் சதீஷ்குமார் (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரம் லோகியாநகர் சுடலை காலனி சந்திப்பு பகுதியில் வந்து கொண்டு இருந்தாராம்.
அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் வழிமறித்து தகராறு செய்து அவதூறாக பேசி மீனாட்சிசுந்தரத்தை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுகுறித்து மீனாட்சிசுந்தரம் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் உதவி ஆய்வாளர் முகிலரசன் வழக்குபதிவு செய்து சதீஷ் குமாரை கைது செய்தார். கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மீது ஏற்கனவே கொலை மிரட்டல் உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.