» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

செவ்வாய் 21, மார்ச் 2023 7:41:20 AM (IST)

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக  கல்லால் தாக்கி கொலை கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி முனியசாமிபுரம் லோகியாநகர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பா மகன் மீனாட்சி சுந்தரம் (34). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கந்தையா மகன் சதீஷ்குமார் (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரம் லோகியாநகர் சுடலை காலனி சந்திப்பு பகுதியில் வந்து கொண்டு இருந்தாராம். 

அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் வழிமறித்து தகராறு செய்து அவதூறாக பேசி மீனாட்சிசுந்தரத்தை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுகுறித்து மீனாட்சிசுந்தரம் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் உதவி ஆய்வாளர் முகிலரசன் வழக்குபதிவு செய்து சதீஷ் குமாரை கைது செய்தார். கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மீது ஏற்கனவே கொலை மிரட்டல் உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory