» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆணையர் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்!

திங்கள் 20, மார்ச் 2023 9:53:41 PM (IST)



திருச்செந்தூர் நகராட்சி ஆணையரின் வாகனம் மோதி ஒருவர் உயிழந்த சம்பவத்தில் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியை சார்ந்த காஜா முகையதீன் மற்றும் அவரது மனைவி மீது கடந்த 6ம் தேதியன்று ஆறுமுகனேரி அருகில் திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் வேலவன் சென்ற வாகனம் மோதியதில் காஜா முகைதீன் உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயமடைந்தார். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற ஆணையர் வேலவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காயல்பட்டணம் சமூக நீதிப் பேரவையின் பொதுச் செயலாளர் அகமது சாகிப் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுரேந்தர், தௌபிக் அன்சாரி, அல்அமீன், செல்வி, தமிழ்ப்பரிதி, முருகேசன், அந்தோணி ராஜ், லெட்சுமி சரண்ராஜ் விடுதலை செழியன் மற்றும் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory