» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லாரி மீது மொபட் மோதி விபத்து: முதியவர் பலி
ஞாயிறு 19, மார்ச் 2023 7:56:15 AM (IST)
எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மொபட் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி (60). கூலி தொழிலாளி இவர் நேற்று எட்டயபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார். பின்னர் மகளை பார்த்துவிட்டு ஊருக்கு தனது மொபட்டில் விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கழுகாசலபுரம் விலக்கு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மொபட் மோதி அந்தோணி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் லாரி டிரைவர் பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் லாரி செட் உரிமையாளர் அடித்துக்கொலை- போலீசார் விசாரணை
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 12:28:08 PM (IST)

மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் நூல் வெளியீட்டு விழா
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:50:58 AM (IST)

தூத்துக்குடியில் பில்டிங் காண்ட்ராக்டர் கார் திருட்டு: வாலிபர் கைது
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:42:03 AM (IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:24:00 AM (IST)

தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறு பவனி : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:54:15 AM (IST)

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:39:50 AM (IST)
