» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபர் கைது
ஞாயிறு 19, மார்ச் 2023 7:38:49 AM (IST)
கயத்தாறு அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அரசன்குளம் கிராமத்தில் காந்தாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா ஆண்டிக்கோனார் என்பவர் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணி திலீப் மற்றும் போலீசார் பருத்திகுளத்தில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருமால் மகன் அன்பரசன் (26) என்பதும், காந்தாரி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் வந்த மோட்டார் சைக்கிள், திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











உண்டியல்Mar 19, 2023 - 10:55:53 AM | Posted IP 162.1*****