» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

சனி 18, மார்ச் 2023 4:25:44 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தென்பாகம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், தென்பாகம் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவண ரமேஷ், சிவகுமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது திருச்செந்தூர் ரோடு சிவந்தாகுளம் பகுதியில் 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரத்தை சேர்ந்த முகில் அபினஷ் (20), கருணாநிதி நகரை சேர்ந்த சூரியபிரகாஷ் (19) என்பதும் மதுரையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory