» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
சனி 18, மார்ச் 2023 2:50:34 PM (IST)
எட்டையாபுரம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துக்குமார் (38) என்பவர் எட்டையாபுரம் அருகே திப்பனூத்து பகுதியில் மாட்டுப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று திப்பனூத்து காலனி தெருவை சேர்ந்த சண்முகராஜ் மகன் சுடலைமுத்து (42) என்பவர் முத்துக்குமாரின் மாட்டுப் பண்ணைக்கு சென்று அங்கு இரும்பு பைப் தருமாறு கேட்டுள்ளார்.
இதற்கு முத்துக்குமார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுடலைமுத்து முத்துக்குமாரிடம் தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் எட்டையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்து சுடலைமுத்துவை கைது செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து மோசடி : கல்யாண மன்னன் கைது!
புதன் 22, மார்ச் 2023 12:34:40 PM (IST)

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
புதன் 22, மார்ச் 2023 12:27:58 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்கள் ஏலம்: மார்ச் 29ம் தேதி நடக்கிறது - எஸ்பி தகவல்!!
புதன் 22, மார்ச் 2023 11:04:48 AM (IST)

கோவிலில் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!!
புதன் 22, மார்ச் 2023 11:00:01 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி மாணவி உட்பட 2பேர் மாயம்!
புதன் 22, மார்ச் 2023 10:50:02 AM (IST)

இடைநின்ற மாணவியை மீண்டும் பள்ளியில் சேர்த்த காவல்துறையினருக்கு பாராட்டு!
புதன் 22, மார்ச் 2023 10:40:42 AM (IST)
