» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மானிய விலையில் ஆட்டோ பெற பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்
சனி 3, டிசம்பர் 2022 8:18:18 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் ஆட்டோ பெற பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நா. முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கீழ் செயல்பட்டு வரும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து தற்போது வரை புதுப்பித்தல் உள்ள பெண் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்கப்பட்டு வருகிறது.
ஆகையால் மானிய விலையில் ஆட்டோ பெற விரும்பும் பெண் ஓட்டுனர்கள் https://tnuwwb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தோ அல்லது அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.