» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் 75-வது சுதந்திர தினவிழா
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 10:19:10 AM (IST)
ஆறுமுகநேரி அருகே சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் 75-வது சுதந்திர தின விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் 75-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. பாதுகாப்பு மேலாளர் உமாசேகர் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக மூத்த செயல் உதவி தலைவர் (பணியகம்) ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், "நம் நாட்டின் விடுதலைக்காக பல இன்னல்களை சந்தித்து உயிரை துச்சமாக எண்ணி பாடுபட்ட எண்ணில் அடங்கா பல வீரர்களுக்கு இந்த நன்னாளில் நம் நன்றிகளை தெரிவிக்க வேண்டும்.
மற்ற நாடுகளை காட்டிலும் நம் நாடு தற்போது நல்ல நிலையில் உள்ளது. மேலும் நம் நாடு பணவீக்கத்தில் தவிக்கும் அண்டை நாடுகளுக்கு பரந்த மனப்பான்மையுடன் பல பொருள் மற்றும் நிதி உதவிகளையும் செய்து வருகிறது. மத்திய அரசு இந்த சுதந்திர தினத்தை 3 நாட்களாக மிகவும் விமர்சையாக அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுமாறு அறிவுறுத்தியது இது மிகவும் போற்றக்கூடிய விஷயமாகும் என்றார். விழாவில் உதவி தலைவர் ஸ்ரீநிவாசன், துணை உதவி தலைவர் சுரேஷ், மீனாட்சி சுந்தரம், அலுவலர்கள், தொழிச்சாங்க பிரதிநிதிகள் மற்றும் அணைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.