» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது.

புதன் 18, மே 2022 3:13:52 PM (IST)

எப்போதும்வென்றான் அருகே அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி  விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகம்மது தலைமையில் உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று (17.05.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செந்தூர் நகர் அருகே உள்ள சுடுகாட்டு பகுதியில் சந்தேகத்திற்க்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் அவர் ஓட்டப்பிடாரம் காட்டுநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிச்செல்வம் (26) என்பதும், அவர் அங்கு வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி மாரிச்செல்வத்தை கைது செய்தனர். இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள மாரிச்செல்வம் மீது ஏற்கனவே எப்போதும்வென்றான், விளாத்திகுளம், தூத்துக்குடி மத்தியபாகம் மற்றும் கடம்பூர் ஆகிய காவல் நிலையங்களில் 18 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory