» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது.
புதன் 18, மே 2022 3:13:52 PM (IST)
எப்போதும்வென்றான் அருகே அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகம்மது தலைமையில் உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று (17.05.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செந்தூர் நகர் அருகே உள்ள சுடுகாட்டு பகுதியில் சந்தேகத்திற்க்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர் ஓட்டப்பிடாரம் காட்டுநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிச்செல்வம் (26) என்பதும், அவர் அங்கு வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி மாரிச்செல்வத்தை கைது செய்தனர். இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள மாரிச்செல்வம் மீது ஏற்கனவே எப்போதும்வென்றான், விளாத்திகுளம், தூத்துக்குடி மத்தியபாகம் மற்றும் கடம்பூர் ஆகிய காவல் நிலையங்களில் 18 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் உரங்கள் ஏற்றுமதி : மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஆய்வு
சனி 2, ஜூலை 2022 8:46:58 PM (IST)

திருமணமாகி 7மாதத்தில் இளம் பெண் மாயம்
சனி 2, ஜூலை 2022 8:40:16 PM (IST)

சர்வேகல், தடுப்பு வேலி சேதம்: தாய், மகன் மீது வழக்கு
சனி 2, ஜூலை 2022 8:36:07 PM (IST)

ரயில்வே பாதுகாப்பு சாதனை விளக்க விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி.
சனி 2, ஜூலை 2022 8:26:52 PM (IST)

தூத்துக்குடி காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு!
சனி 2, ஜூலை 2022 5:05:45 PM (IST)

புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை திறப்பு விழா: நாலுமாவடியில் 7ம்தேதி நடைபெறுகிறது!
சனி 2, ஜூலை 2022 4:09:14 PM (IST)
