» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது!
வெள்ளி 26, ஏப்ரல் 2024 8:17:58 AM (IST)
ஆறுமுகனேரியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி (28). இவா் ஆறுமுகனேரியில் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் ஆறுமுகனேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிகண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று சோதனை நடத்தி, அரசு முத்திரையுடன் கூடிய 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனா்.