» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோ பயணிகளிடம் வழிப்பறி : 3 பேர் கைது!

புதன் 28, ஜூலை 2021 10:26:19 PM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே ஆட்டோ பயணிகளை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட முயன்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் கனகராஜ் (38). இவர், தனது ஆட்டோவில் குறுக்குச்சாலையில் இருந்து கீழமுடிமண் கிராமத்துக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கே.சுப்பிரமணியபுரம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ஆட்டோவை வழிமறித்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த பயணிகளிடம் அந்த 3 பேரும் வழிப்பறியில் ஈடுபட முயற்சி செய்தனர். ஆனால் ஆட்டோ டிரைவரும், பயணிகளும் சுதாரித்துக் கொண்டு அந்த 3 பேரையும் பிடிக்க முயன்றனர். 

இதனால் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவட்டனர். இதுகுறித்து கனகராஜ் ஓட்டப்பிடாரம் போலீசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குறுக்குச்சாலை மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கசங்காத பெருமாள் கோவில் அருகே ஓட்டப்பிடாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள், போலீசை கண்டதும் வண்டியை திருப்பி தப்பி ஓட முயன்றனர். 

இதில் நிலைதடுமாறி 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதையெடுத்து 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் 3 பேரும் ஆட்டோவை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட முயன்றவர்கள் என்பது தெரியவந்தது.  தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் தூத்துக்குடி பெரியசாமிநகரைச் சேர்ந்த முனியசாமி மகன் ஜெகன்குமார் (23), சத்யா நகரைச் சேர்ந்த முருகன் மகன் விஜய் என்ற பாண்டி (21), கண்ணன் மகன் சீனு (21) என தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory