» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தருவைக்குளம் பங்குதந்தை பணிநிறைவு பாராட்டு விழா
திங்கள் 14, ஜூன் 2021 4:56:55 PM (IST)
தருவைக்குளம் ஆலய பங்கு தந்தைக்கு காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் புனித நிக்கோலாசியார் ஆலய பங்குதந்தையாக 5 ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு செய்துள்ள பங்குதந்தை எட்வா்ட் ஜே-வுக்கு தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில் பாராட்டு விழா நடந்தது. ஆலயம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில் மன்ற நிர்வாகிகள், பங்கு தந்தைக்கு நினைவு பாிசு வழங்கி பொன்னாடை அணிவித்து கெளரவித்தனர். இதில், ஒருங்கினைப்பாளா்கள் லாரன்ஸ், அசோகன், பொருளாளா் தேவ திரவியம், உட்பட பலர் கலந்து கொண்டனா்.