» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாயை விஷம் வைத்து கொன்ற மூதாட்டி மீது வழக்கு

ஞாயிறு 13, ஜூன் 2021 8:56:18 AM (IST)

கயத்தாறு அருகே நாயை விஷம் வைத்து கொன்ற மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே மூர்த்திஸ்வரம் கிராமத்தில் உள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் ஊர்காவலன் மகன் பாலசுப்ரமணியன். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில், அதே தெருவைச் சேர்ந்த முனியம்மாள் (60) என்பவர், அந்த நாயை விஷம் வைத்துக் கொன்று விட்டதாக கயத்தாறு போலீசில் பாலசுப்ரமணியன் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார், முனியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இறந்த நாய் கயத்தாறு கால்நடை டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் ரசாயன பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு வந்த பிறகே நாய் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory