» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் உலக தண்ணீர் தின விழா
சனி 23, மார்ச் 2024 9:59:59 AM (IST)
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் உலக தண்ணீர் தின விழா நடந்தது.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலம் நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் உலக தண்ணீர் தின விழா நடந்தது. கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் தலைமை வகித்தார். மாணவி பிளஸ்சி ஆலியாஸ் வரவேற்றார்.
தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை துறை இயக்குனரும், திருமறையூர் மறுரூப ஆலய சேகர தலைவருமான ஜான் சாமுவேல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவ_ மாணவிகளுக்கு தண்ணீரின் முக்கிய த்துவத்தைப்பற்றியும், எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றியும் மற்றும் புவி வெப்பமயமாதலுக்கான காரணத்தைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் தண்ணீரின் முக்கியத்துவத்தை ப்பற்றியும், தண்ணீர் மூலம் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தண்ணீர் மாசு படுவதை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றியும் கலந்துரையாடல் மூலம் விளக்கிக்கூறினர்.
இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி நிஷா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன், முதல்வர் சோபியா செல்வராணி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.