» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அகப்பைகுளம் பள்ளியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி

சனி 23, மார்ச் 2024 9:58:51 AM (IST)



நாசரேத் அருகே உள்ள அகப்பைகுளம்  டிஎன்டிடிஏ  துவக்கப் பள்ளியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை  சார்பில் நாசரேத் அருகே உள்ள  அகப்பைகுளம் டின்டிடிஏ துவக்கப்பள்ளியில்  உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி  நடந்தது. பேரணியை அகப்பைகுளம் பழைய மாணவர் சங்க தலைவர் பொன்ராஜ்   துவக்கி வைத்தார். மாணவ_ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பவனி சென்றனர். இதனை தொடர்ந்து 

பள்ளியில் உலக தண்ணீர் தின  விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது .  அகப்பைகுளம்  குருவானவரும் ,  பள்ளி தாளாளருமான பாஸ்கரன் தலைமை வகித்தார். உதவி ஆசிரியை ரோஸ்மேரி வரவேற்றார் . திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை  இயக்குநர்  ஜான் சாமுவேல் உலக தண்ணீர் தினம் குறித்தும், தண்ணீரின் அவசியம், பயன்பாடு மற்றும் சேமிப்பு குறித்தும் மாணவ_ மாணவிகளுக்கு  எடுத்துரைத்தார்.தலைமை ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory