» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)
டி.என்.பி.எஸ்.சி., நேர்முக தேர்வில் மாற்றம்
திங்கள் 4, டிசம்பர் 2023 5:13:36 PM (IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், இன்று நடக்கவிருந்த நேர்முக தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முக தேர்வு, நவம்பர், 22 முதல் நடந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக, இந்த தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இன்று நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு, வரும், 6ம் தேதியும்; 6ம் தேதி அழைக்கப்பட்டவர்களுக்கு, 7ம் தேதியும் நேர்முக தேர்வு நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ் அறிவித்துள்ளார்.
அதேபோல, வட்டார கல்வி அதிகாரி பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையில், வட்டார கல்வி அதிகாரி பணிக்கு, டி.ஆர்.பி., எனப்படும், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டி தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
மிக்ஜாம் புயல் காரணமாக, இந்த சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
வியாழன் 7, நவம்பர் 2024 8:54:38 AM (IST)

நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு
புதன் 9, அக்டோபர் 2024 5:18:05 PM (IST)

அரசு ஐடிஐகளில் நேரடி சேர்க்கை செப்.30 வரை நீட்டிப்பு : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:45:55 PM (IST)

குரூப் 2, 2ஏ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சனி 25, மே 2024 11:45:50 AM (IST)

தூத்துக்குடியில் 17ஆம் தேதி கல்விக்கடன் சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
சனி 4, நவம்பர் 2023 4:24:07 PM (IST)

தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் வங்கிப் பணிக்கு மாதிரி நோ்முகத் தோ்வு
திங்கள் 30, அக்டோபர் 2023 7:54:14 AM (IST)
