» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

சுகாதார மையங்களில் செவிலியர், லேப் டெக்னீசியன் பணிகள்!

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:26:12 PM (IST)

ஈரோடு மாவட்டத்தில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஈரோடு மாவட்டத்தில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் கீழ்வரும் திட்டங்களில் ஒப்பளிக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுபற்றிய விபரம் வருமாறு:

மொத்த காலியிடங்கள்: 120

பணி: Staff Nurse

காலியிடங்கள்: 106

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி : செவிலியர் பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். பின்னர் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Lab Technician,

காலியிடங்கள் : 11

சம்பளம்: மாதம் ரூ.13,000

தகுதி : +2 தேர்ச்சியு டன் ஒரு ஆண்டு லேப் டெக்னீசியன் படிப்பை முடித்திருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடற் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Pharmacist

காலியிடங்கள் : 3

சம்பளம் : மாதம் ரூ.15,000

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்று டி.பார்ம் அல்லது பி.பார்ம் முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முகத்தேர்வுக்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்சும். நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி, இடம் பற்றிய விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.erode.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

நிர்வாக செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், திண்டல், ஈரோடு மாவட்டம், பின்கோடு எண். 638 012.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 9.8.2025


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory