» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!

வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டாப் செலெக்‌ஷன் கமிஷன் எஸ்.எஸ்.சி-யில் போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பை பொறுத்தவரை 21.10.2025 தேதியின் படி 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் உள்ளிட்டோருக்கு கட்டணம் இல்லை.

ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் (https://ssc.gov.in/ ) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.10.2025.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory