» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
மத்திய அரசு துறைகளில் 3,134 காலி பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி அறிவிப்பு
புதன் 25, ஜூன் 2025 10:36:10 AM (IST)
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,134 பணியிடங்களை நிரப்ப தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 3,134 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் பின்வருமாறு:
பணியிடங்கள் விவரம் :
லோயர் டிவிஷன் கிளர்க் (LDC),
ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்ஸ்ட்ண்ட்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ஏ
ஆகிய பிரிவுகளில் 3,134 காலி பணியிடங்கள்
கல்வி தகுதி : டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணித பாடப்பிரிவு எடுத்து படித்து இருப்பது அவசியம். எல்.டிசி பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.
வயது வரம்பு : 18 வயது நிரம்பியவர்களும் 27 வயது பூர்த்தி அடையாதவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
சம்பளம் : பணிக்கு தகுந்தபடி மாறுபடும், அதிகபட்சமாக ரூ. 29,200 - 92,300/ வரை
விண்னப்பிக்க கடைசி நாள் : 18.07.2025
விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
தேர்வு முறை : கணிணி வழியில் இரண்டு கட்ட தேர்வு நடைபெறும்:
தேர்வு அறிவிப்பினை படிக்க : https://ssc.gov.in/
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)

ரயில்வேயில் 434 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
புதன் 17, செப்டம்பர் 2025 12:27:25 PM (IST)

நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 3:34:18 PM (IST)

தமிழக அரசு துறைகளில் 645 இடங்கள்: ஆக.13வரை விண்ணப்பிக்கலாம்!
சனி 9, ஆகஸ்ட் 2025 4:02:04 PM (IST)



A. AnnapackiamJul 3, 2025 - 08:27:50 PM | Posted IP 162.1*****