» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காலநிலை மாற்ற இயக்கத்தில் பணி இடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

செவ்வாய் 1, அக்டோபர் 2024 8:56:04 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியிடமான தொழில்நுட்ப உதவியாளர் / களப்பணியாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியிடமான தொழில்நுட்ப உதவியாளர் / களப்பணியாளர் (Technical Staff / Field Staff ) பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பட்டம் (Any Degree) மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சு (Typewriting) திறன்கள் பெற்றிருக்க வேண்டும். 

மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.20,000/- வழங்கப்படும். இப்பணி 12 மாதங்கள் (1 ஆண்டு) முழுக்க ஒப்பந்த அடிப்படையிலானது. மாவட்ட காலநிலை மாற்ற இயக்க திட்டத்தின் கீழ் (District Climate Change Mission) மேற்படி ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்திற்கு மேற்படி தகுதியுள்ள தனியர்களிடமிருந்து சுய விவர படிவங்கள் (CV) வரவேற்கப்படுகின்றன. 

சுய விவரப் படிவங்களை மாவட்ட வன அலுவலர், மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம், மாவட்ட வன அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு வருகின்ற 10.10.2024க்குள் விண்ணப்பதாரர்கள் அனுப்பி வைக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு 0461-2346600 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory