» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
வியாழன் 7, டிசம்பர் 2023 7:57:49 PM (IST)
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 13-ந்தேதிக்கு நீட்டிப்பு செய்து தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
2023-24-ம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுனர் காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (வியாழக்கிழமை) கடைசி நாளாக இருந்தது.
இந்த நிலையில் மிக்ஜம் புயல் மழையின் காரணமாக இந்த பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 7-ந்தேதியில் இருந்து 13-ந்தேதிக்கு நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அவகாசம் கேட்டும் சிலர் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் வருகிற 14 மற்றும் 15-ந்தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டு இருப்பதாகவும் தேர்வு வாரியம் அறிவித்து இருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுத்துறை வங்கிகளில் 1,007 பணியிடங்கள்: ஜூலை 21க்குள் விண்ணப்பிக்கலாம்!
சனி 5, ஜூலை 2025 12:05:50 PM (IST)

மத்திய அரசு துறைகளில் 3,134 காலி பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி அறிவிப்பு
புதன் 25, ஜூன் 2025 10:36:10 AM (IST)

மீன்வளத் துறையில் பணியிடங்கள் : ஆட்சியர் தகவல்
சனி 21, ஜூன் 2025 7:36:44 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு
திங்கள் 16, ஜூன் 2025 4:56:01 PM (IST)

மத்திய அரசு துறைகளில் 14,582 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 12, ஜூன் 2025 4:47:07 PM (IST)

விமானப் படையில் 153 பணியிடங்கள் : ஜூன் 15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 2, ஜூன் 2025 5:22:18 PM (IST)
