» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
வியாழன் 7, டிசம்பர் 2023 7:57:49 PM (IST)
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 13-ந்தேதிக்கு நீட்டிப்பு செய்து தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
2023-24-ம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுனர் காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (வியாழக்கிழமை) கடைசி நாளாக இருந்தது.
இந்த நிலையில் மிக்ஜம் புயல் மழையின் காரணமாக இந்த பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 7-ந்தேதியில் இருந்து 13-ந்தேதிக்கு நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அவகாசம் கேட்டும் சிலர் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் வருகிற 14 மற்றும் 15-ந்தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டு இருப்பதாகவும் தேர்வு வாரியம் அறிவித்து இருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்கள்: பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:18:25 PM (IST)

சவுதி அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள்: பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 8, பிப்ரவரி 2025 11:03:53 AM (IST)

ரயில்வே பள்ளிகளில் 1036 பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 18, ஜனவரி 2025 12:26:18 PM (IST)

பாரத ஸ்டேட் வங்கியில் 13,735 காலிப்பணியிடங்கள்: தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்!
வியாழன் 19, டிசம்பர் 2024 4:42:23 PM (IST)

பழனி கோவிலில் 296 காலி பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 9, டிசம்பர் 2024 5:06:58 PM (IST)

ரயில்வேயில் 5647 அப்ரன்டிஸ்கள்: டிச.3க்குள் விண்ணப்பிக்கலாம்!
சனி 30, நவம்பர் 2024 5:15:52 PM (IST)
