» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறையில் 25 பணியிடங்கள்
வெள்ளி 14, மே 2021 7:38:40 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் ஆட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் மசால்ஜி 10, இரவுக் காவலர் 12, தோட்டக்காரர் 1, துப்புரவு பணியாளர் 2 ஆகிய நிலையில் மொத்தம் காலியாக உள்ள 25 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தகுதியான நபர்களை அவுட் சோர்சிங் மூலம் அளிக்க, அரசு விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட, அரசின் அங்கீகாரம் பெற்ற தகுதி வாய்ந்த முகமை (ஏஜென்சி)கள், முத்திரையிடப்பட்ட கவரில் உரிய விண்ணப்பத்தை முகமை அங்கீகார நகல், ஊதிய ஒப்பந்த புள்ளி விவரங்களுடன் 31.05.2021-க்கு முன்பாக ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
கவரின் மேல்புறம் மசால்ஜி / இரவுக்காவலர் ஆவுட் சோர்சிங் விண்ணப்பம் என குறிப்பிட வேண்டும். 31.05.2021-க்கு பின்னர் வரப்பெறும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஒப்பந்த தாரர்கள் முன்னிலையில் 04.06.2021 அன்று ஒப்பந்த புள்ளி கள் திறக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய அரசு துறைகளில் 14,582 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 12, ஜூன் 2025 4:47:07 PM (IST)

விமானப் படையில் 153 பணியிடங்கள் : ஜூன் 15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 2, ஜூன் 2025 5:22:18 PM (IST)

எஸ்பிஐ வங்கியில் மாதம் ரூ.48,480 சம்பளத்தில் 2964 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 22, மே 2025 5:44:22 PM (IST)

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணியிடங்கள் : பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 12:01:03 PM (IST)

மருத்துவர், செவிலியர் பணியிடங்களுக்கு 24-ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:57:16 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)
