» சினிமா » செய்திகள்
இணையத்தில் ஜனநாயகன் படக்கசிவு: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ரஜினி, சூர்யா வலியுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 5:27:14 PM (IST)
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ரஜினிகாந்த், சூர்யா உள்ளிட்ட பல முன்னணித் திரை பிரபலங்கள் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த்: "ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ சட்டவிரோதமாக வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அரசு உரிய விசாரணை நடத்தி, இதில் தொடர்புடையவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் தொடரக்கூடாது."
சூர்யா: "இது மனதை உடைக்கும் அநீதி. ஒரு குழுவின் இத்தனை கால உழைப்பை இப்படிச் சீரழிப்பது மன்னிக்க முடியாதது. தயவு செய்து யாரும் திருட்டுப் பிரதியைப் பார்க்கவோ அல்லது பகிரவோ வேண்டாம். என் நண்பர்களுக்கு (படக்குழுவினர்) ஆதரவாக நான் நிற்கிறேன்."
சிவகார்த்திகேயன்: "ஒவ்வொரு திரைப்படமும் பலரின் ஆசை, ரத்தம் மற்றும் வியர்வையில் உருவாகிறது. தயவு செய்து இணையத்தில் வெளியான பிரதியைத் தவிர்க்கவும். திரையரங்கில் வெளியாகும் வரை காத்திருந்து அங்கு பார்த்து ரசியுங்கள். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."
கமல்ஹாசன்: "ஜனநாயகன் கசிவு என்பது ஒரு தனிப்பட்ட விபத்து அல்ல; இது ஒட்டுமொத்த அமைப்பின் தோல்வி. தணிக்கை நடைமுறைகளில் ஏற்படும் காலதாமதமே இத்தகைய திருட்டுத்தனங்களுக்கு வழிவகுக்கிறது. கலைக்கும் கலைஞனுக்கும் எதிரான இந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும்."
விஜய் தேவரகொண்டா: "இந்தச் சம்பவம் எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இது பலரின் கனவுகளை அழிக்கும் செயல். குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறியத் தவறினால் அது ஒட்டுமொத்த அமைப்பிற்கும் தோல்வியாகும்."
சிரஞ்சீவி: "சினிமா என்பது பலரின் கூட்டுக்கனவு. திருட்டுத்தனமாகப் படம் பார்ப்பதைத் தவிர்த்து படைப்பாளர்களின் உழைப்பை மதியுங்கள்."
பூஜா ஹெக்டே: "விஜய் சாரின் கடைசிப் படத்தை நாம் பெரிய திரையில்தான் கொண்டாட வேண்டும். எங்கள் குழுவின் தியாகங்களுக்கு மதிப்பு கொடுங்கள்."
குஷ்பு: "இது வெறும் பொழுதுபோக்கு அல்ல; ஒரு திட்டமிட்ட திருட்டு. இதில் ஈடுபடுபவர்கள் மற்ற குற்றவாளிகளுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்ல."
விஷால்: "இந்த லீக் வீடியோக்களைப் பார்க்கும்போது மனம் உடைகிறது. இவ்வளவு உழைப்பும் வீணாவதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது."
இதேபோல் சரத்குமார், ஜி.வி. பிரகாஷ், லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தெலுங்குத் திரை உலகைச் சேர்ந்த பலரும் இச்சம்பவத்திற்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
படத் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ், இந்தப் படக்கசிவு தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாகவும், வீடியோக்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் ‘தர்மன்’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வீடியோவை வெளியிட்ட படக்குழு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:55:30 PM (IST)

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் வந்த வினை - நடிகை ஷகிலா வேதனை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:42:45 PM (IST)

கூடுதல் மின் கட்டணத்தால் தவெக ஆட்சியில் மக்கள் அவதி: நடிகை வைஷாலி விளாசல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:22:23 PM (IST)

காதலரால் நார்சிசிஸ்டிக் கொடுமைக்கு ஆளானேன்: நடிகை அனுபமா பரமேஸ்வரன் வேதனை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 9:45:55 PM (IST)

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ: மு.க.முத்து வீட்டில் வனத்துறை விசாரணை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:22:56 PM (IST)

மனைவி ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்! - ஏ.கே. 64 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:58:11 PM (IST)

