» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
நான் ஓய்வு பெறவில்லை: ரோஹித் சர்மா விளக்கம்
சனி 4, ஜனவரி 2025 12:40:55 PM (IST)

ஃபார்மில் இல்லாத காரணத்தால் சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளதாகவும்; தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றும் ரோஹித் சர்மா விளக்கம் தந்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. சிட்னியில் நடைபெறும் கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இந்த தொடரை சமன் செய்து டிராபியை தக்கவைக்கும். இந்த சூழலில் ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. இது குறித்து அவர் தெரிவித்தது:
"நான் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. இந்தப் போட்டியில் இருந்து மட்டுமே விலகி உள்ளேன். பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வுக்குழுவினர் உடன் இது குறித்து மிகவும் எளிதான முறையில் கலந்து பேசினேன். ‘என்னால் ரன் சேர்க்க முடியவில்லை, நான் ஃபார்மில் இல்லை; இந்தப் போட்டி நமக்கு முக்கியமானது; ஃபார்மில் இருக்கும் வீரர் இதில் விளையாட வேண்டும் என்றேன்’. எனது கருத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டு, ஆதரவு அளித்தார்கள்.
போட்டியில் இருந்து விலகும் இந்த முடிவு எனக்கு மிகவும் கடினமானது. அணியை முன்னிறுத்தி யோசிக்கும் போது இது அறிவார்ந்த செயல் என கருதுகிறேன். அதை தவிர வேறு எதையும் நான் யோசிக்கவில்லை.
எங்களது பேட்டிங் ஆர்டரில் சிலரது ஃபார்ம் சிறப்பாக இல்லை. அதனால் அதிகளவில் ஃபார்மில் இல்லாத வீரர்களை அணியில் கொண்டு நாம் விளையாட முடியாது. அதை நான் யோசித்து பார்த்தேன். நான் எங்கும் செல்லவில்லை. நான் ஓய்வு பெறவில்லை. எனது பேட்டில் இருந்து ரன் வராத காரணத்தால் விலகி உள்ளேன். இந்த நிலை அடுத்த ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு பிறகும் தொடரும் என எந்த உத்தரவாதமும் இல்லை. அப்படி யாரும் சொல்ல முடியாது.
நான் யதார்த்தமான மனிதன். ஒருவர் வசம் இருக்கும் மைக், போனா, லேப்டாப்பில் எழுதும்/பேசும் எதுவும் எங்களது வாழ்வினை மாற்றாது. இந்த விளையாட்டை நாங்கள் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறோம். நாங்கள் எப்போது விளையாட வேண்டும் அல்லது எப்போது வெளியேற வேண்டும் என்றெல்லாம் அவர்கள் சொல்லக் கூடாது. நான் பக்குவம் கொண்ட மனிதன். அதனால் எனது வாழ்வில் எந்த முடிவை எப்போது எடுக்க வேண்டுமென்று எனக்கு தெரியும்.
எங்களது முழு கவனமும் சிட்னி போட்டியில் மட்டுமே உள்ளது. பும்ராவின் வளர்ச்சி மகத்தானது. அவரை கண்ட நாள் முதல் அதை நான் பக்கத்தில் இருந்து பார்த்து வருகிறேன். அது நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே செல்கிறது” என கூறினார். ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக சிட்னி போட்டியின் ஆடும் லெவனில் இடம்பெற்று விளையாடிய ஷுப்மன் கில், முதல் இன்னிங்ஸில் 20, இரண்டாவது இன்னிங்ஸில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும்: முன்னாள் கேப்டன் நம்பிக்கை
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:26:06 PM (IST)

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : ரோகித் சர்மா புதிய சாதனை!
திங்கள் 10, பிப்ரவரி 2025 4:28:52 PM (IST)

சுப்மன் கில், ஜடேஜா அசத்தல்: முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!
வெள்ளி 7, பிப்ரவரி 2025 8:25:46 AM (IST)

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: ரஷித் கான் உலக சாதனை
வியாழன் 6, பிப்ரவரி 2025 3:49:08 PM (IST)

சர்வதேச செஸ் போட்டி: குகேசை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 9:11:25 PM (IST)

அபிஷேக் சர்மா அதிவேக சதம் விளாசி சாதனை : இந்தியா அபார வெற்றி!
திங்கள் 3, பிப்ரவரி 2025 11:20:57 AM (IST)
