» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி-20' கிரிக்கெட்டில் 10 ரன்னில் சுருண்ட மங்கோலியா!

சனி 7, செப்டம்பர் 2024 12:50:27 PM (IST)



'டி-20' கிரிக்கெட்டில் 10 ரன்னுக்கு சுருண்டது மங்கோலிய அணி.

'டி-20' உலக கோப்பை தொடருக்கான ஆசிய பிரிவு தகுதிச்சுற்று மங்கோலியாவில் நடந்தது. இதன் 'ஏ' பிரிவு போட்டியில் மங்கோலியா, சிங்கப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சிங்கப்பூர், பீல்டிங் தேர்வு செய்தது. மங்கோலிய அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. முதல் ரன்னை எடுப்பதற்குள் இரு விக்கெட்டுகளை இழந்தது. 

தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தன. ஒரு கட்டத்தில் 5 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதில் இருந்து கடைசி வரை மீளவே முடியவில்லை. மங்கோலியா அணி 10 ஓவரில் 10 ரன்னுக்கு (2 உதிரி) சுருண்டது. கன்போல்டு, ஷுரன்ட்செட்செக் அதிகபட்சம் தலா 2 ரன் எடுத்தனர். சிங்கப்பூர் அணியின் 17 வது சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷா பரத்வாஜ், 3 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்தார்.

பின் களமிறங்கிய சிங்கப்பூர் அணியின் மன்பிரீத் சிங், முதல் பந்தில் 'டக்' அவுட்டானார். அடுத்து வந்த பதுயாக், சிக்சர், பவுண்டரி என விளாச, 0.5 ஓவரில் 13/1 ரன் எடுத்தது. 115 பந்து மீதமுள்ள நிலையில், சிங்கப்பூர் அணி 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education

New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory