» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சி.எஸ்.கே.வை வீழ்த்தினால் மட்டும் கோப்பை கிடைக்காது - ஆர்சிபி அணியை விமர்சித்த ராயுடு!

வியாழன் 23, மே 2024 12:08:15 PM (IST)

"ஐபிஎல் கோப்பை சி.எஸ்.கே.வை வீழ்த்தி பெறுவது அல்ல" என்று ஆசிபி அணியை சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விமர்சித்துள்ளார். 

இறுதி கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோல்வியடைந்து வெளியேறியது.

முன்னதாக சென்னை - பெங்களூரு இடையே நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில், பெங்களூரு வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதனை பெங்களூரு வீரர்கள் வெறித்தனமாக கொண்டாடினர். அந்த போட்டியின்போது வர்ணனையாளர் பிரிவில் இடம் பெற்றிருந்த சென்னை அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய பெங்களூரு அணியை அம்பத்தி ராயுடு விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு:- "ஐபிஎல் கோப்பைகள் கொண்டாட்டங்களாலும், ஆக்ரோஷத்தாலும் வெல்லப்படுவதில்லை. ஐபிஎல் கோப்பை சி.எஸ்.கே.வை வீழ்த்தி பெறுவது அல்ல. ஐ.பி.எல். கோப்பையை வெல்ல நீங்கள் பிளே ஆப்களில் நன்றாக விளையாட வேண்டும்" என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory