» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசு பொருட்காட்சி-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை எதிரிலுள்ள ப்ளோரன்ஸ் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி-2026 நடைபெற உள்ளது.
அரசுப் பொருட்காட்சியில், 27 அரசு துறை அரங்கங்களும், அரசு சார்பு நிறுவனங்கள் சார்ந்த 5 அரங்குகள் என 32 அரங்குகள் அமையவுள்ளது. துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள், மானியத்துடன் கூடிய கடனுதவிகள் போன்ற திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் துறை கண்காட்சி அரங்குகளை அமைத்திட வேண்டும்.
ஒவ்வொரு துறை அலுவலர்களும் தனி அலுவலரை நியமனம் செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக பொருட்காட்சி துவக்க நாள் முதல் நிறைவு நாள் வரை பொருட்காட்சி முன்பு மாநகர பேருந்துகள் நின்று செல்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
காவல்துறை சார்பில் தேவையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி சார்பில் பொருட்காட்சிக்கு தேவையான குடிநீர் வசதி, தூய்மை பணிகள், தினமும் குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
தீயணைப்புத்துறை சார்பில் ஒரு தீயணைப்பு வாகனம், சுகாதாரத்துறையின் சார்பில் தேவையான மருத்துவ வசதிகளுடன் மருத்துக்குழுவினை நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசுப் பொருட்காட்சி 2026 சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.வித்யா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ம.கயிலைச்செல்வம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ம.ச.மகாகிருஷ்ணன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா கோலாகலம் : லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:37:31 PM (IST)

டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களை விற்கத் தடை: விநியோகம் அதிரடி முடக்கம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:55:49 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.650 கோடியில் ஏவுகலன் மையம்: முதல்வர் விஜய் தலைமையில் ரூ.67,452 கோடி ஒப்பந்தம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:40:56 AM (IST)

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)









