» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பழநியில் ரூ.100 கோடி கோவில் நில மோசடி: கைதான வழக்கறிஞர் சிறையில் உயிரிழப்பு!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:39:13 PM (IST)

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், நீதிமன்ற உத்தரவை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இப்பாரிய நில மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இவ்வழக்கு தொடர்பாகச் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், திருப்பூர் மாவட்டம் உடுமலை பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழநியைச் சேர்ந்த சேதுபதி, கோவில் நிர்வாக அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறையினர் எனப் பலரிடம் சிபிசிஐடி போலீசார் விரிவான விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில், நில மோசடியில் ஈடுபட்டதாக வெள்ளத்துரை, வழக்கறிஞர் அன்வர்தீன், முருகதாஸ், சேதுபதி ஆகிய 4 பேரைச் சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் வழக்கறிஞர் அன்வர்தீனுக்குத் திடீரெனக் கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரைச் சிறைத்துறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறையில் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்துச் சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா கோலாகலம் : லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:37:31 PM (IST)

டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களை விற்கத் தடை: விநியோகம் அதிரடி முடக்கம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:55:49 PM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.650 கோடியில் ஏவுகலன் மையம்: முதல்வர் விஜய் தலைமையில் ரூ.67,452 கோடி ஒப்பந்தம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:40:56 AM (IST)

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)









