» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீதிமன்றக் காவலில் சபரிவர்மன் மரணம்; காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதயநிதி வலியுறுத்தல்!

செவ்வாய் 14, ஜூலை 2026 5:43:12 PM (IST)

udhayanithistalin.jpg

நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணமடைந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார். கைதான போது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் தாக்கியதே மரணத்திற்குத் தார்மீகக் காரணம் என்றும் குற்றம் சாட்டிச் சபரிவர்மனின் குடும்பத்தார் நீதிகோரித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் (விஜய்) இச்சம்பவத்திற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய காவல்துறையினர், ஈரோட்டில் அதே குட்கா விற்பனைப் புகாரில் கைது செய்யப்பட்ட தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நிர்வாகி அருண் என்பவரை அன்றைய தினமே சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். சபரிவர்மன் போன்ற சாமானியருக்கு ஒரு சட்டம், தவெக நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் எனச் செயல்படும் காவல்துறையின் இரட்டைப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்றும், இம்மாற்றுத்திறனாளி இளைஞரின் மரணத்திற்கு நீதி கிடைப்பதைத் தற்போதைய புதிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

சொடலைJul 15, 2026 - 06:55:30 PM | Posted IP 104.2*****

ஒண்ணுமே தெரியாமல் போயிடுவான்

விஜய்Jul 14, 2026 - 06:29:18 PM | Posted IP 162.1*****

வாயை இருக்க மூடி கொள்வான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory