» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: 7 நாளில் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 5:26:53 PM (IST)

தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் ராஜினாமா செய்த 4 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 17-ஆவது சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சூழலில், அதிமுகவிலிருந்து விலகித் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்த 4 பேருக்குச் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், பின்னர் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோல், தவெக அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதில் மதுராந்தகம் (தனி) மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் (தனி) சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் இணைந்தனர்.
இதன் காரணமாகத் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளும் காலியானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. விதிமுறைப்படி, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் (ஜூலை) இறுதியில் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டு மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபாநாயகர் நோட்டீஸ்
இந்தச் சூழலில், ராஜினாமா செய்த 4 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்தும், அவர்கள் 4 பேர் மீதும் ஏன் தகுதி நீக்கம் உள்ளிட்ட உரிய நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்தும் 7 நாட்களுக்குள் நேரில் அல்லது எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

திமுக அரசின் சாதனைகள் மீது சோஃபா மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:19:26 PM (IST)

திமுக தோல்விக்கு அமைச்சர்களும், அதிகாரிகளுமே காரணம்? மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:00:12 PM (IST)

ஆசாரிபள்ளம் மருத்துவமனை சாலையில் ஆபத்தான பள்ளம்: போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 12:36:58 PM (IST)

கூட்டணி கட்சிகள் தேர்தலுக்குப் பின் தங்கள் நிறத்தை வெளிப்படுத்துகின்றன: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
வெள்ளி 12, ஜூன் 2026 12:23:57 PM (IST)










Yoseph EJun 12, 2026 - 08:02:58 PM | Posted IP 104.2*****