» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் மின்வெட்டை ஏற்படுத்தச் சிலர் சதி செய்கின்றனர்: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:52:39 PM (IST)
தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்ய மின்சாரத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதே வேளையில் வேண்டுமென்றே மின்வெட்டை ஏற்படுத்தச் சிலர் சதித் திட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கலந்துகொண்டு பேசியதாவது: "தமிழகத்தில் மின்வெட்டு எதனால் ஏற்படுகிறது, அது எவ்வளவு நேரத்தில் முழுமையாகச் சரி செய்யப்படுகிறது என்ற விபரங்களை மின்சாரத்துறை மக்களின் பார்வைக்கு மிகவும் வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறது.
எங்கெங்கு மின்விநியோகத் தடை ஏற்படுகிறது என்பது குறித்தும் மக்களுக்கு முன்கூட்டியே தகுந்த முறையில் தெரியப்படுத்தப்படுகிறது. இருப்பினும், மாநிலத்தில் திட்டமிட்ட மின்வெட்டை ஏற்படுத்தத் தனிநபர்கள் சிலர் சதி செய்கின்றனர். சில இடங்களில் வேண்டுமென்றே பியூஸ் கேரியர்கள் திருடப்பட்டு உள்ளன. இது போன்ற செயல்களையும், வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் மின்வெட்டுகள் குறித்தும் மின்சாரத்துறை மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
மின்வெட்டுப் பிரச்சினைகள் கண்டறியப்பட்ட உடனே அவை போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்படுகின்றன. ஆனால், அரசியல் காரணங்களுக்காக மக்களைப் போராட்டம் நடத்தச் சிலர் தூண்டி விடுகின்றனர். உதாரணமாக, பெரம்பூர் பகுதியில் மின்தடை ஏற்பட்ட 40 நிமிடங்களிலேயே ஊழியர்களால் அது சரி செய்யப்பட்டு மின் விநியோகம் சீராகக் கொடுக்கப்பட்டது. ஆனால், இரவு முழுவதும் மின் விநியோகம் இல்லை என்பது போன்ற தவறான தகவல்களையும் வதந்திகளையும் சமூக ஊடகங்களில் திட்டமிட்டுப் பரப்பினார்கள். குறிப்பாக, வடசென்னையில் ஏற்படும் மின்வெட்டுகளைத் துரிதமாகக் கண்காணித்து உடனுக்குடன் சரி செய்வதற்காகக் கூடுதலாகப் பல ஊழியர்கள் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மின்தடை ஏற்பட்டால் முடிந்தவரை விரைவாகச் சரி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்கள் மூலமாக வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கும் மின் விநியோகம் தொடர்பான அனைத்துக் குறைபாடுகளும் உடனுக்குடன் ஆய்வு செய்யப்பட்டு நிவர்த்தி செய்யப்படுகின்றன. மேலும், இரவு நேரங்களில் ஏற்படும் திடீர் மின் விநியோகக் குறைபாடுகளைக் களைவதற்கெனத் தனியாகச் சிறப்பு இரவு நேரக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.
மின்சாரத்துறையின் தற்போதைய தொழில்நுட்ப அமைப்புகள் போதுமானதாக இல்லை என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர், சோலார் மின் உற்பத்தியில் மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாடு தற்போது பின்தங்கி உள்ளதைச் சுட்டிக்காட்டினார். இந்த நிலையை மாற்றி, மாநிலத்தில் சோலார் மின் உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்கும் நோக்கில், அடுத்த 2 வாரங்களுக்குள் புதிய சோலார் மின் உற்பத்திக் கொள்கை முறைப்படி கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் உறுதியளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
புதன் 24, ஜூன் 2026 4:04:08 PM (IST)

பாமக உட்கட்சிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி? தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை சந்தித்த அன்புமணி!
புதன் 24, ஜூன் 2026 3:52:20 PM (IST)

திமுக ஆட்சிக்கால 500 மின்சார பஸ் டெண்டர் ரத்து: தவெக அரசு அதிரடி நடவடிக்கை!
புதன் 24, ஜூன் 2026 12:50:47 PM (IST)

திமுக ஜென்-சி ஒருங்கிணைப்பாளரை நள்ளிரவில் கைது செய்ய முயற்சி: உதயநிதி, கனிமொழி கண்டனம்!
புதன் 24, ஜூன் 2026 12:08:59 PM (IST)

ஆட்சிக்கு வந்த 40 நாட்களில் செய்த சாதனைகள் : பட்டியலை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்!
புதன் 24, ஜூன் 2026 11:01:14 AM (IST)

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)








